Saturday, March 21, 2009

தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...?

வணக்கமுங்க,

மகிழ்ச்சியா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

போன வாரம் பெங்களூருவில் இருந்து ஊருக்கு போனபோது, மாமா சொன்னாரு "எலக்சன் வருதுல்ல இனிமே பணப்புழக்கம் நல்லா இருக்கும்". என்னங்கடா இது பணப்புழக்கதிற்கும் தேர்தலுக்கும் அவ்வளவு தொடர்பா.....???

சரி, முன்னெல்லாம் சன் ம்யூசிக்கில் வரும் ஹேமா சின்ஹா கேள்வி கேட்டு, பதில் வேண்டி க்ளு குடுப்பாங்க ஞாபகம் இருக்கா....? அது மாதிரி ஒரு கேள்வி.

பணப்புழக்கம் எங்கிருந்து துவங்குகிறது...? குறிப்பாக தேர்தல் நேரத்தில்...?

தெரியலையா...?

இதோ க்ளூ...

1. இந்த இடம் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகெல்லாம் இருக்கிறது. மினி பஸ், மின்சாரம், சாக்கடை போன்ற அடிப்படை வசதியேதுமில்லாத சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கூட உண்டு.

தெரியலையா...?

2. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 50 பேர் அந்த இடத்திலேயே மரணித்தாலும், இரண்டே நாட்களில் மீண்டும் சகஜ நிலைக்குத்திரும்பி வழக்கம் போல் உற்சாகமாக செயல் படும் இடம் அது.

நல்லா யோசனை செய்தும் தெரியலையா...?

3. வழக்கமாக மாலை நேரங்களில் தான் கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் இங்கு அதிகாலை டீக்கடைகள் திறப்பதற்க்கு முன்பிருந்தே இருந்தே குடிமக்கள் காத்துக்கிடப்பார்கள்.

இன்னும் தெரியலையா...?

4. அந்த இடத்தோட பேர்ல முதல் எழுத்து "டா" கடைசி எழுத்து "மாக்".

இன்னும் தெரியலையா...? அட போங்க சார்... காமெடி பண்ணாதீங்க...!!!

இதனால நமக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருது, ஆனா ஏழை வீட்டுக் குழந்தைகள் ஒரு வேளையாவது நல்லா சாப்பிடுதா, கிழிசல் இல்லாம ஆடை உடுத்துதா, பள்ளிக்கூடம் போகுதா....? இதெல்லாம் யாருக்கு வேணும். நமக்கு வேண்டியதெல்லாம் பணம், பதவி, புகழ், இதெல்லாம் இப்போ நமக்கு வெறியாக மாறிவருகிறது. இவையெல்லாம் வேணும்னா என்னவேனாலும் செய்ய தயாரா இருக்கோம்ங்கறது ரொம்பவே வெட்கமாக இருக்கு...என்னது வெட்கமா...???...யாருக்கு...??? யாருக்கோ..!!!

நமக்கென்ன கவலை...எங்கே இந்த தற்காலிகமான பணம், பதவி நம்மவிட்டுப் போய்டுமோங்கறது மட்டும் தானே. பொறுப்பில்லாத குடிகாரப்பாவிகள், பதர்கள் இங்கே இருக்கிற வரைக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, சுரண்டியெடுத்து கஜானாவை நிரப்புவது ஒன்று மட்டுமே நமது நோக்கம்.

ஆகவே எனதருமை குடிமக்களே, குடியும் குடித்தனமுமாக வாழிய பல்லாண்டு.

No comments:

Post a Comment