Friday, April 17, 2009

தமஅமுக --> தேர்தல் வாக்குறுதிகள்

வணக்கமுங்க.....!!!

தேர்தல் வந்து எல்லாரும் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருப்பதால்...ஒரு ஆர்வக்கோளாருல.. நாமும் ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல் களத்துல குதிக்கலாம்னுதான் இந்த முயற்சி.

நம்ம கட்சியோட பேரு.... "னவ் த கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்"....1...2...3...4...5...6...7...8...9...சரி சரி சொல்லி விடுகிறேன்.....கீழ பாருங்க சார்.....ஹலோ கீழனா....கீழ குனிஞ்சு பாக்காதீங்கப்பு...உங்க ஸ்க்ரீன்ல....கீழ ஸ்க்ரோல் பண்ணி பாருங்கய்யா. ஆத்தீ...இப்பவே கண்ண கட்டுதே.

தமிழக மக்கள் அதிவேக முன்னேற்ற கழகம் (தமஅமுக)

கட்சியோட தேர்தல் வாக்குறுதிகளை பாக்கறதுக்கு முன்னாடி, நம்ம கட்சி வேட்பாள்ர்கள் குறித்து ஒரு சிறு குறிப்பு. நாம கட்சி ஆரம்பிக்கறோம்னு எப்படியோ தெரிஞ்சிகிட்டு தேர்தல்ல சீட்டு கேட்டு பயங்கரமான போட்டிங்க. இந்த போட்டிய சமாளிக்கறதுக்குத்தான் தமிழகத்தில் முதன்முறையாக "சிங்கிள் விண்டொ சிஸ்டம்" கொண்டுவத்திருக்கிறது தமஅமுக. அதாவது நம்ம கட்சி ஆபீஸ்ல இருக்கும் கதவு, ஜன்னல் அனைத்தையும் எடுத்து விட்டு, என்ட்ரன்ஸ்ல ஒன்டி ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே வைக்கப்போகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் அந்த ஜன்னல் வழியாக வந்து தான்....எலக்சன் சீட்டுக்கு அப்ளை பண்ண வேண்டும். அதுக்கு பேர் தான் சிங்கிள் விண்டோ சிஸ்டம்.

சரி நம்ம தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கலாம் வாங்க.

1. மக்கள் அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற ஒரே கொள்கையோடு தொடங்கப்பட்ட ஒரே ஒரு கட்சியான தமஅமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்தால், மக்களின் அன்றாட அடிப்படைத்தேவைகளை அரசாங்கமே கவனித்துக்கொள்ளும்.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி, ஐம்பது ரூபாய்க்கு சமையல் பொருட்கள், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும், என்றெல்லாம் மற்ற கட்சிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது, யார் வந்து கஷ்டப்பட்டு சமையல் செய்வது..என்பது தான் தமஅமுக வின் கேள்வி. எனவே தாய்மார்களின் அன்பு வேண்டுகோளின் படி வேளா வேளைக்கு அரசாங்கமே உங்கள் வீடுதேடி சாப்பாட்டை அணுப்பும். காலையில் இட்லி, பூரி, தோசை, பொங்கல், வடை ஆகியவற்றில் எது வேண்டும் என்று முதல் நாள் இரவே அரசு இணைய தளத்தில் பதிவு செய்து விட்டால் போதும், அடுத்த நாள் காலை சரியாக ஏழு மணிக்குள்ளாக பொது மக்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும். மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜ் பிரியாணி போன்றவை தபால் மூலமாக பார்சலில் அணுப்பி வைக்கப்படும். வாரம் இரு முறை அசைவமும் வழங்கப்படும். இரவு நேரத்தில் ஆங்காங்கே நாங்கள் ஏற்படுத்த இருக்கும் அரசு நியாய விலை உணவகங்களில் இலவசமாக எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. இலவச கலர் டிவி என்கிறார்கள்....ஆனால்... நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்தால் தான் தெரியும் அதன் கஷ்டம். ஓய்வாகவும் சாய்வாகவும் அமர்ந்து கொண்டு இலவச கலர் டீவி பார்க்க வசதியாக வீடுதோறும் இலவச் சாய்வு நற்காலியும், டியுரோப்ளெக்ஸ் மெத்தையும் வழங்கப்படும். மேலும் தமஅமுக ஆட்சிக்கு வந்தால், கலர் டிவியுடன் சேர்த்து கேபிள் கனெக்சனும், மின்சாரமும், சம்சாரமும் இலவசமாக வழங்கப்படும். மன்னிக்கவும், எங்கள் கட்சியினர் மீது எங்களுக்கே நல்ல நம்பிக்கை இல்லாத காரணத்தால் சம்சாரம் வழங்குவது இயலாத காரியம். எனவே சம்சாரம் மட்டும் நீங்களாக தேடிக்கொள்ள வேண்டுகிறோம்.

4. குடிமக்களின் நலன் கருதி, தமஅமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை பட்டி தொட்டிகள் எங்கும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குவாட்டர் இலவசமாக வழங்கப்படும். அதற்கும் மேலாக குடிக்க விரும்புபவர்கள் உங்கள் குடும்ப அட்டையினை அடையாளமாக காட்டி மலிவு விலையில் பாட்டில்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

5.செல்போன் இலவசம் என்கிறார்கள், கிரெடிட் கார்டு, பேங் லோன், மாமன், மச்சான் போன்றவர்கள் தினமும் ஆயிரம் போன் செய்து மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதை தமஅமுக நன்றாக அறியும். என்வே சீன தேசத்தில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து உங்கள் தனிப்பட்ட செய்லாளராக நியமனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போன் தொந்தரவுகள் இருக்காது.

6. மக்களின் அனைத்து தேவைகளையும் அரசங்கமே கவனித்துக் கொள்ளுமாதலால், சும்மா இருப்போர் சங்கம், வெட்டிக்கதை பேசுவேர் நல வாரியம், இலவச் கலர் டிவி பார்ப்போர் இயக்கம், குடிமக்கள் கூட்டம், போன்ற இயக்கங்களைத் தொடங்கி மக்கள் நல பணிகளை சீரும் சிறப்புமாக செய்வது தமஅமுக வின் தீவிர கொள்கைகளில் ஒன்றாகும்.

இவ்வாறாக தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், தமிழக மக்கள அதிவேகமாக முன்னேற வேண்டும் என்கிற உண்மையான கொள்கையுடனும் தேர்தல் களம் காணும் தமஅமுக விற்கு உங்கள் பொண்ணான வாககுகளையெல்லாம் வாரி வாரி வழங்குமாறு வேண்டுகிறோம்.

நமது கொள்கைகளுக்கு பெருத்தமாக தேர்தல் கமிஷனிடம் நாம் வேண்டிக் கேட்டுள்ள தேர்தல் சின்னம்....இதோ.

நன்றி...!!!
(தமஅமுக)

Wednesday, April 15, 2009

தேர்தல்

வணக்கமுங்க...,

"தேர்தல்"

சாலை வசதி,

சாக்கடை வசதி,

பள்ளிக்கூடம்,

பஸ் வசதி,

இவையெல்லாம் தருவதாய்ச்சொல்லி

இறுதியில் பீரும், பிரியாணியும்,

ஐம்பதும் மட்டுமே தந்து,

ஐந்தாம் முறையாக வெற்றிபெற்றோம்.

Sunday, April 12, 2009

அன்புசிவம் அவர்களின் மன நலம் பேணுவோம்

வணக்கமுங்க...,

வாழ்க வளமுடன்...!!!

நண்பர் அன்புசிவம் அவர்களின் "மன நலம் பேணுவோம்" என்கிற தொகுப்பினை இங்கே உங்களுக்காக இணைத்துள்ளேன்.
மன நலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியில் என்னால் ஆன சிறு பங்களிப்பு.

இத்தொகுப்பைக் குறித்த உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை www.anbusivam.com என்கிற வலைப்பூவிலோ அல்லது sivupalani@gmail.com என்கிற அவரது மின்னஞ்சல் முகவரியிலோ பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Anbusivam's Mana Nalam Penuvom
Anbusivam's Mana Nalam Penuvom Anbusivam


இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த நண்பர் அன்புசிவம் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

Friday, April 10, 2009

ஜனநாயகம் Vs பணநாயகம்

வணக்கமுங்க,

வாழ்க வளமுடன்.

சூப்பர் நட்சத்திர நடிகர் மாதிரி தான் இந்த பணமும். எப்போ வரும், எப்டி வரும், எங்கிருந்து வரும் அப்டிங்கறதெல்லாம் தெரியாது, ஆனா வரவேண்டிய தேர்தல் சமயத்தில கரெக்ட்டா வந்திரும். வேட்பாளர்களின் சுய ஒப்புதலே கோடிகளில் சொத்துவிபரம் சொல்லும் போது, உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது நாமெல்லாம் யூகிக்க வேண்டிய போட்டி தான். கோடிகளும், கேடிகளும் இல்லாவிட்டால் இப்போதெல்லாம் தேர்தலில் போட்டி கூட போட முடியாது, பிறகு தானே வெற்றி, தோல்வி எல்லாம். பெரும் கட்சிகள் கூட, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வது, வெரும் பணபலம் ஒன்றை மட்டுமே வைத்துத்தான் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இதுவரை இல்லாதவர்கள் கூட தன்னிடம் தண்ணீராக செலவு செய்ய பணம் இருந்தால் எந்த ஒரு கட்சியிலும் சீட் வங்குவது மிகவும் எளிது. கல்வித்தகுதி என்ன?, மக்களுக்காக சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா?, நேர்மையானவரா?, நல்ல ஒழுக்கம் உடையவரா?, என்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போது இடம் இல்லை. எவ்வளவு கோடிகளும், எத்தனை கேடிகளும் உங்களிடம் இருக்கிறது என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட இப்போதெல்லாம், நேர்மையானவர்களாக இருப்பதில்லை என்பது வெட்கித்தலை குனிய வேண்டிய ஒன்றாகும். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் இருப்பவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் போது தான் இவர்களின் சுய ரூபம் தெரிகிறது. தேசிய செய்தித் தொலைக்காட்சிகளின் நேரடி விவாதத்திற்கு வரும் போது மட்டும் என்னமோ பெரிய யோக்கியர்கள் போல் பேசும் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது மிகவும் அருவருப்பான புழுபூச்சிகளைப் பார்ப்பது போல் தோன்றுகிறது.

பணம், பதவி, புகழ் இவை தவிற மக்களின் நலன் கருதியே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று வெரும் வாய்ப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகச் சொல்லும் அரசியல்வாதிகள் இந் நாட்டிலும் உண்டு என்பது நம்மால் கனவிலும் நினைக்கமுடியத ஒன்றாகும். ஏதோ இங்கொன்றும் அங்கொன்றும் அரிதாகக் காணக்கிடைப்பவர்களூம் கூட பண நயக்த்தின் முன்னால் எதுவும் செய்ய இயலாமல் தவிப்பது வேதனையானது,



பணம் இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்கிற கீழ்த்தரமான நிலையில் இருந்து நாம் மீண்டு வரும் வரை எத்தனை தலைவர்கள் வந்தாலும், எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, ஜன நாயகம் என்பது எட்டாக்கனியாகி விடுமோ என்கிற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது

தேர்தல் காலத்தில் ஆகும் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே செய்யும், வேட்பாளர்கள் யாரும் ஒரு பைசாகூட தங்கள் சொந்த பணத்தையோ, கட்சியின் பணத்தையோ செலவு செய்யக் கூடது என்கிற சட்டம் வரவேண்டும்.

பணம் தோற்று, ஜனம் வென்று வரும் நாள் என்று வருமோ....???

Wednesday, April 1, 2009

இது ஒரு தேர்தல் காலம்...!!!

வணக்கமுங்க,

இப்போல்லாம் எங்க போனலும் எலக்சன் பத்தி தான் பேச்சு போங்க. வேற ஏதையும் கேட்க முடிவதில்லை. பஸ்ல, ரயில்ல, நடந்து போகையில கூட தேர்தல் பற்றியும், அரசியல் வாதிகளைப்பற்றியும் எல்லோரும் விமர்சனம் செய்யும் காலம் இது.

தேர்தல் வந்தாலே ஒரு கலை கட்டிவிடுகிறது என்கிறான் நண்பன். ஆனால் தேர்தல் என்பது ஏதோ போனமா, எதோ ஒரு நல்ல கட்சிக்கோ அல்லது நல்ல வேட்பளருக்கோ ஓட்டைப் போட்டோமா, வந்தோமான்னு இருந்த காலம் எல்லாம் மலையேறிப்போய் பல வருடங்களாகி விட்டது. இதை நாம் உண்ர்ந்ததாகவே தெரியவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது. காமராஜரைப் போன்ற, தோழர் ஜீவாவைப் போன்ற அரசியல் தலைவர்கள் இருந்த காலத்தில் அப்படியேல்லாம் இருந்திருந்தால் சரி தான், ஆனால் இன்றைய அரசியல் வியாதிகள் மத்தியிலும் அப்படியேதான் இருப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிப்பது முறையாகாது.

சுதந்திரப் போராட்டம் முடிவடைந்த காலத்தில் மக்கள் சேவை, நாட்டின் நலனுக்காக சுய நலன் கருதாமல் உழைக்க வேண்டும், என்கிற அடிப்படையில் தான் இந்திய அரசியல் களம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அதில் பொது மக்கள் சேவையை விடவும் தம்மக்கள் சேவையே பெரிது என்றெண்ணும் கொடியவர் வாழும் காலம் இது. தனக்காகவும், தன்னைச்சார்ந்தவர்களுக்காவும், தன்னை துதிபாடுகிறவர்களுக்காகவும் எதுவும் செய்யத்தயாரக இருக்கும் அரசியல் வியதிகள் நாட்டை ஆட்கொண்டு விட்டனர் என்பது ஊறரிந்த ராசியம். எல்லாம் தெரிந்தும் "தலைவா வாழ்க" என்று கூவிக் கத்துகின்ற கூலிக்கூட்டங்கள் இருக்கும் வரை வியாதிகள் இருக்கவே செய்யும். ஒரு நூறும், ஒரு பீரும் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் காலம் கெட்டழிந்து போகும் வரை இந்நோயின் பிடியில் இருந்து யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று கதறிக் கூவுகின்றோரும், தனக்கென்று வந்துவிட்டால் விவசாயியின் மகன் விவசாயம் செய்வதில் தவறேதும் இல்லை என்று நியாயப்படுதும் காலமிது. நானே எனது வாரிசுகளோ பதவிக்கு வரவே மாட்டோம் என்று அடித்து சத்தியம் செய்தோரும் தம்மக்கள் வகிக்கும் பதவிக்காக உயிரையும் கொடுத்துப் போராடியதை உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிதானிருக்கிறது. அதில் நூறில் ஒரு பகுதியை நாட்டின் நலம் குறித்தும் சிந்திகக முயற்சியாவது செய்திருக்கலாம்.

இப்போதாவது விழித்துக்கொள்வோம், மக்கள் நலன் மட்டுமே பெரிதெனக்கருதும் நல்லோரை தேர்ந்தேடுப்போம், இத்திருநாட்டை அரசியல்வியாதியின் கோரப் பிடியில் இருந்து விடுவிப்போம்.