Friday, March 13, 2009

கண்டதும் காதல் வருமா...?

வணக்கமுங்க,

நல்லா இருக்கீங்களா..? வாழ்க வளமுடன்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம், கண்டதும் காதல் வருமா சார்...?

ஸ்கூல்ல இருந்தே எத்தனையோ பெண்ணுங்கள பாத்திருக்கேன், ஆனா கண்டதும் காதல் வருமா அப்டிங்கற சந்தேகம் மட்டும் இன்னும் தீரல. எத்தனையோ தமிழ் சினிமா பாத்துமா இந்த கண்டதும் காதல்ல நம்பிக்கை வரலைன்னு நண்பன் கேட்கிறான். அட போடா, தமிழ் சினிமா பாத்துதான் கண்டதும் காதலே வெரும் மாயைன்னே தெரிஞ்சுகிட்டேன் என்பது என் பதில்.

நீங்களே சொல்லுங்க பாஸூ, பஸ் ஸ்டாப்ல பாத்தவுடனே வருது, பஸ்ல டிக்கெட் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், எடுக்க சில்லரை இல்லைன்னாலும் இந்த பாழாப்போன காதல் வருது, போஸ்ட் ஆப்பீஸ்ல ஸ்டாம்பு ஒட்டறதுக்குளே வருது, கர்ச்சீப்பை தவர விட்டாலும் வருது, துப்பட்டா பறந்தாலும் வருது, தெரியாம இடிச்சிகிட்டா வருது, தெரிஞ்சே இடிச்சாலும் வருது, லைப்ரரியில புக் எடுத்தா வருது, எடுத்த புக்கை தவறவிட்டா வருது, அட இவ்வளவு ஏன் சார்....கால் செருப்பு அறுந்து போனாலும் காதல் வருது சார்.

என்ன தான் செஞ்சாலும், கழுதை நமக்கு ஒரு மண்ணும் வர மாட்டேங்குதே.... நானே இந்த வயித்தெரிச்சல்ல இருக்கும் போதுதான் பசங்க போன் பண்ணி, என்ன மாப்ளே இன்னிக்கு சன்டே.... நாட் கோயிங் அவுட்....??? அப்டின்னு ஸ்டைலா கேள்வி கேக்கும் போதே தெரியும் பக்கிப்பய ஏதோ பிகரை கரெக்ட் பண்ணி...பிக்கப்பும் பண்ணி....எங்கேயா...ஒரு ஷப்பிங் மால்ல வெட்டியா சுத்திகிட்டு இருக்கு அப்படிங்கறது.

காதல், காதல்னா சும்மாவா...? உனக்குத்தான் காதலிக்க நேரமில்லைன்னாலும், காதலுக்கு மரியாதை வேண்டாமா...? என்பது நண்பர்கள் வாதம்.

கண்டதும் காதல்ங்கறது வெறும் டுபாக்கூர் என்பது என் எண்ணம்.....அதேப்படிங்க பாத்தவுடனே காதல் வருது...? காதல் ஒரு ஆழமான உணர்வு இல்லையா...? ஒருவருக்கொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய உறவு இல்லையா..? பாத்தவுடனே வருவது வெரும் உடல் கவர்ச்சி, அலைபாயும் மனசோட ஈர்ப்பு, அது வெரும் காமம் தானே தவிர...காதல் கிடையவேகிடையாது. முதலில் ஏற்படுகிற உடல்கவர்ச்சி வேண்டுமானால் பின்னால் காதலாக மலரக்கூடுமேயன்றி, கண்டதும் காதல் என்பது உலகில் இல்லை, இல்லவே இல்லை.

ஆகவே நண்பர்களே...!!! கண்டதும் வருவது காமம்......காதல் இல்லை.

அன்புடன்,
இமைசோரான்

No comments:

Post a Comment